எல்லா புகழும் இறைவனுக்கே

ButterfliesHeartRainbowColours Pictures, Images and Photos HeartCandleButterfly Pictures, Images and Photos

Tuesday, June 29, 2010

கை விட்டாள் கை பிடித்தாள்

அனுப்பியவர் : விஸ்வா
மச்சு வீடு கட்டி உன்னுடன் வாழ நினைத்தேன்
ஆனால்
மச்சினியுடன் வாழ வைத்துவிட்டு
நீ போய் விட்டாய்.
ஆனால் அவளால் உன் இடத்தை நிரப்ப முடியவில்லை.
 

கிடைத்ததும் கிடைக்காததுவும்

அனுப்பியவர் : லோகி- தாராபுரம்

கிடைத்ததை கொழுகம்பாய் மாற்று கிடைக்காததை
உன்னை இருக்கி சுற்றிய மலைபாம்பு
விட்டது சனியன் என நினைத்து நிம்மதியாகு
மனதை ஒருமுகபடுத்து தற்போதய பணியில்
தீவிர கவனம்  செலுத்து வரும் காலம் உன் கையில்
பணம் வந்தால் பத்தும் உன்னை தேடி வரும்
வரும் காலத்தில் கஷ்ட்டபடாமல் இருக்க இப்போதுதிவீரமாககஷ்ட்டபடு>>>>>>>>>
நண்பா!
நாளை என்ன இந்த வினாடியில் இருந்தே காலம் உனது கையில் தான்!!

எல்லாம் நீதான்

அனுப்பியவர் : சிவகாசி ஆனாந்
கனவுகளாக நான்
நினைவுகளாக நீ!
கற்புராமாய் கரைகிறது என் வாழ்க்கை
காதலித்துவிடு பெண்ணே!
இல்லை என்றால்
கல்லறை என் காவியம் பாடும்!!

Sunday, June 27, 2010

என்னைப் போல்

எழுதிப்பாருங்கள் என்னை போல
காதலில் தோற்று....
எழுதுவது பாவம்
ரசிப்பது புண்ணியம்..!

இது தான் நட்பு

கவிதை என்பது யோசிப்பது!
காதல் என்பது நேசிப்பது !
நட்பு என்பது சுவாசிப்பது !
யோசிக்காமல் இருக்கலாம்.....
நேசிக்காமல் இருக்கலாம்...
ஆனால்
சுவாசிக்காமல் இருக்க முடியுமா?
இது தான் நட்பு!!

காதலும் நட்பும்

மரணத்தை நோக்கி நகரும் வாழ்க்கையில்
நம்மை வாழ சொல்லி வற்புறுத்துவது
காதலும் நட்பும் தான்.
காதலை நேசி......
நட்பை சுவாசி......

Saturday, June 26, 2010

காதல் ஓரு பார்வை

(எனது கோணத்தில்)
அனுப்பியவர் : லோகி- தாராபுரம்
காதல் காதல் ஏன் இந்த காதலை விட்டு
வெளியேறாமல் தவிக்கிரார்கள்
காதல் அலையால் இத்துனை பாதிப்பா
சே இந்த இளைஞ்சர்கள் ஏன் காதல் காதல் என காதலை
சே சே இந்த குமார் காதலை படிக்க போய்
எனக்கும் அதே பேச்சா வருதே
நான் எஸ்கேப் ஹா ஹா ஹா

Friday, June 25, 2010

நட்பு

அனுப்பியவர்: நாசிக்யிலிருந்து - யாசர் அரஃபத்
Friendship enbathu
''kai_kum'',eye_kum ulla relation pola irukkanum,
'kai' la adipatta  'eye'  alum 
'eye' alutha 'kai' thudaikkum,,,,,

அவளுக்காக

அனுப்பியவர்: நாசிக்யிலிருந்து - யாசர் அரஃபத்
அவள் விருப்பிய அனைத்தையும் நானும் விருப்பினேன்
அவள் வெறுத்த அனைத்தையும் நானும் வெறுத்தேன்
என்னையும் சேர்த்து........................
உனக்கு வரும் விக்கல் கூட கடினமாக இருந்தால் சொல்
உன்னை நினைப்பதையும் நிறுத்திவிடுகிறேன்.
காதலின் சின்னம் கேட்டேன்,
அவள் “ கல்லறை என்றால்”
கல்லறைக்கு வழி கேட்டேன் ,
என்னை காதலி என்றால் !!

கல்லறை

அனுப்பியவர்: நாசிக்யிலிருந்து - யாசர் அரஃபத்
உண்மை சொல்ல கண்கள்,
பொய் சொல்ல பெண்கள்,
அதை நம்பியே ஆண்கள்,
உண்மை சொன்ன கண்கள் சிறை அறையில்
பொய் சொன்ன பெண்கள் மணவறையில்
அதை நம்பிய ஆண்கள் கல்லறையில்!

காதலும், நட்பும்

அனுப்பியவர்: நாசிக்யிலிருந்து - யாசர் அரஃபத்
நேசித்த ”இதயத்தையும் “
சுவாசித்த “ அன்பையும்”
ஒரு நாளும் மறக்க முடியாது !
இதயம் வலிக்கும் போது கண்ணீர் வந்தால் 
அது காதல்,
கண்ணீர் வரும் போது இதயம் வலித்தால்
அதுதான் நட்பு !!

Thursday, June 24, 2010

படித்ததில் பிடித்தது !!

அனுப்பியவர்: கோவை-நித்தியஸ்ரீ

தாத்தாவின் மூக்குக் கண்ணாடி 

கை தவறி விழும் முன் சொன்னேன் 


'Sorry ' தாத்தா என்று …! 


தூங்கும் போது கழுத்து வரை 


போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன் 

'Thanks ' ம்மா என்று …! 
நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே 


வாழ்த்து அட்டையில் எழுதினேன் 


'Happy Birthday da' என்று …! 


காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர் 


அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன் 


'Good Morning Uncle' என்று …! 


கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன் 


அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன் 


'Hai' என்று …! 


மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில் 


அவள் விரல் பிடித்தே எழுதுவேன் 


'I Love You' என்று …! 


இரவில் … வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை 


குத்தியது முள் … 


'அம்மா' என்று அலறினேன் 


குத்தியது முள்ளில்லை - என்னை 


குத்திக் காட்டியது - என் தமிழ் 

சிந்தனை செய் மனமே !!

அனுப்பியவர்: கோவை-நித்தியஸ்ரீ

முயற்சி தோற்றால் வெற்றி இழப்பு
முயற்சிக்க தோற்றால் வாழ்கையே இழப்பு ! 

நீ பிறந்து தரித்திரமாக இருந்தாலும் 
வாழ்வது சரித்திரமாக இருக்க வேண்டும் ! 
வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை . . ஆனால் 
அதற்கான தகுதி அனைவர்க்கும் உண்டு . . . முயன்றால் ! 
வாய்ப்புகளை பெறுபவன் அதிர்ஷ்டசாலி 
உருவாக்குபவன் புத்திசாலி
அதனை தக்க சமயத்தில் பயன்படுத்தி கொள்பவனே திறமைசாலி ! 

நேற்று நடந்ததை நினைத்திருந்தால் 
நாளை நடப்பது பிழையாகும் ! 
சிந்தித்து செயல்படு தோழனே 
வெற்றி உமக்கே !! 

இவன் தான் கடவுள் !!

அனுப்பியவர்: கோவை-நித்தியஸ்ரீ
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் 
பிறந்து பாரென இறைவன் பணித்தான்! 
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் 
படித்துப் பாரென இறைவன் பணித்தான்! 
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் 
அறிந்து பாரென இறைவன் பணித்தான்! 
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் 
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! 
பாசம் என்பது யாதெனக் கேட்டேன் 
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! 
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் 
மணந்து பாரென இறைவன் பணித்தான்! 
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் 
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! 
முதுமை என்பது யாதெனக் கேட்டேன் 
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! 
வறுமை என்பது என்னெனக் கேட்டேன் 
வாடிப் பாரென இறைவன் பணித்தான்! 
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் 
இறந்து பாரென இறைவன் பணித்தான்! 
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில் 
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்! 


ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி 


'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்! 

வாழ்வின் திசை மாற்றம் !!

அனுப்பியவர்: கோவை-நித்தியஸ்ரீ

அரை ஜான் அளவில் கருவறை 
அள்ளி முத்தமிடும் தாயின் கையில் சொர்க்கம் 
கேட்டதை வாங்கித்தரும் தந்தை தெய்வம் 
காலம் முழுதும் கை கொடுக்கும் கல்வி 
சின்ன சின்ன சண்டைகள் 
சிரிக்க வைக்கும் சிந்தனைகள் 
கண்ணீரை துடைக்கும் கரங்கள் 
காதல் கீதம் கொண்ட நெஞ்சம் 
நண்பர்கள் உறவாக 
நெஞ்சங்கள் மகிழ்வூட்ட 
நொடி முழுதும் நிம்மதி சந்தோசம் 
கவி பாடும் புலவனாய் 
காலம் முழுவதும் வாழ எண்ணிய நான் 
இன்று... 


வர்த்தகம் தேடி வாழ்கை அமைத்தேன் 

கை நிறைய பணம் 
கார் வீடு என்று அத்தனை வசதியும் கொண்டேன் 
காலத்தின் திசை மாற்றமோ 
இல்லை என் மனதின் திசை மாற்றமோ 
என் மனதில் துளியும் சந்தோசம் இல்லை 
பெற்ற பிள்ளையின் பரிவும் இல்லை 
மணம் புரிந்த துணையின் காதலும் இல்லை 


இப்போது என்னுகிறேன் 

எதற்கு இந்த கணினி பொறியாளர் என்ற பட்டம் 
என் பிள்ளை விட்டு விளையாடும் 
பட்டம் திசை மாறி பறப்பதை கண்டு !! 

இலங்கை

அனுப்பியவர்: கோவை-நித்தியஸ்ரீ
அடக்க வேண்டுமென்று
அரசு சிங்கங்கள்...
ஆட்சியை கொண்டு அள்ளி வீசுகிறது
சிங்கள தமிழர்களை ...
ஆதரவோடு பொங்கி போராடும் புலிகள் ....
போரட்டத்தின் முடிவு
பலியாகும் அப்பாவி மக்கள்...
இரத்தத்தில் இலங்கை மிதந்தாலும்
இதழ்களில் புன்னகையோடு அமைதியாய்
காத்திருக்கிறார் புத்தர்
சிங்கமும் புலியும் மனிதனாக மாறவேண்டுமென்று ....

உன்னால் தானே நான் வாழ்கிரேன்

அனுப்பியவர்: டெல்லியிருந்து விஸ்வா
என் அன்பும் நீ
என் அறிவும் நீ 
என் பண்பும் நீ
என் பாசமும் நீ 
என் வாழ்வும் நீ
என் வலியும் நீ 
என் சோகமும் நீ
என் சொந்தமும் நீ 
என் கனவும் நீ
என் கண்ணீரும் நீ 
என் உணர்வும் நீ
என் உறக்கமும் நீ 
என் நினைவும் நீ
என் நிழலும் நீ 
என் குரலும் நீ
என் கோபமும் நீ 
என் சரிரம் நீ
என் சாரிரமும் நீ 
என் சிந்தையும் நீ
என் சிரிப்பும் நீ 
( இப்படி எல்லாமே நீ இருப்பதால் தானோ
  நான் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.)

உன்னுள் நான் இருக்க

அனுப்பியவர் : பிரியா கிருஷ்னண் பெங்களுர்
எதிலும் விடுதலை தேடும்
மனிதர்களுக்கு .....
மனதில் உன் இதய சிறை விரும்பும்
சிறு பறவை நான் !

நலமறிய ஆவல்

அனுப்பியவர் : பிரியா கிருஷ்னண் பெங்களுர்
நலம் என்கிறாய் நான்
கேட்டகவில்லை 
நீ நலமானு உன்னை ,
நான் துடிக்கும் போது 
நீ மட்டும் எப்படி இருப்பாய் நலமாக ,
பொய் சொல்ல எப்படி கட்டாய நலமாக!! 

ஓரு வரண்ட கற்பனை

அனுப்பியவர் : லோகி- தாராபுரம் -
புன்னகையே புன்னகை யே ஏன்
கை விட்டு போனாய் ?
ஓ நீ பொன் நகை என்பதாலா
விலைவாசியால் சரி கனவில் கூட வரமறுப்பதேன்
புன்னகையே !!

Wednesday, June 23, 2010

என் இதயம்

இதயம் இறக்கும் வரை
உயிரானவளே உன்னை
நினைத்து துடிக்குமடி!
என் இதயம் !!

பந்தயம்

அனுப்பியவர்: ஜாகீர் 

தேவதைக்கும் எனக்கும் பந்தயம்
 அவள் சொன்னாள்
”என்னை வெட்கப்பட வைக்க முடியாது?”
 நான் கேட்டேன் ”ஏன் முடியாது?”
சரி பார்க்கலாம் என
அவள் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது பந்தயம்
ஒரே ஒரு கேள்வியில் 

தோல்வியை ஏற்றுக் கொண்டாள்
வெட்கப்பட்டுக் கொண்டே!!!!
நான் கேட்டதெல்லாம் 

“நீ தேவதையான நாள் என்னைக்கு?” மட்டுமே

Saturday, June 19, 2010

என்ன கொடுமை இது

காதலித்தும் பார்த்துவிட்டேன் ஒருத்தியை .. 
கண்களுக்கும் கூட ஓர் மொழி உண்டு என்று
தெரிந்து கொண்டேன் .. 
அவளை காதலித்த போது ... 
யார் கண் வைத்தார்கள் என்று தெரியவில்லை 
என்னவள் இன்று என்னுடன் இல்லை .... 
சத்தியமாக உன்னை என்றும் பிரியமாட்டேன் என்று 
சத்தியம் செய்த என் சகி 
இன்று சத்தியமாக என்னுடன் இல்லை........... 
களவும் கற்று மற என்றார்கள் .... 
அவள் என்னிடம் காதலை கற்று மறந்து விட்டாளோ?

கல்லறையில் காதல்

காதல் செய்தபோது மலர் கொடுத்தேன்
அந்த அழகிய மலருக்கு
ஏற்க்க மறுத்தால் பாவம்
கடைசியில் என்னை தேடி வந்தால்
கையில் மலரோடும் கண்ணில் கண்ணீரோடும்
என்னால் மலரையும் வாங்க இயல வில்லை !
அவள் கண்ணீரையும் துடைக்க இயலவில்லை !! 
காரணம் கல்லறையில் நான் 
அவள் நினைவுகளோடு மட்டும்...........

காதல் தத்துவம்

"காதல்
தோல்வியின் சின்னம்
தாஜ்மஹால்
வெற்றியின் சின்னம்
இதுவரை இல்லை
ஜெயித்தவன்
காதலை மதிப்பதில்லை
தோற்றவன்
காதலை மறப்பதில்லை"

என்னுள்ளே நீ இருப்பதனால்

என்னை விட உன்னை நேசித்தேன்..
உன்னை விட இன்று என்னை நேசிக்கிறேன்..
என்னுள்ளே நீ இருப்பதனால்..!

என் கவிதைகள் ..

எனதல்ல என் கவிதைகள் .....
என்னவளின் 
கண் மொழி,
சைகை மொழி,
பேச்சு மொழி, 
இன்னும் 
எங்களுக்குள்ளான,
நிறைய ரகசிய 
மொழிகளின்
அரைகுறையான 
மொழி பெயர்ப்புகளே 
என் கவிதைகள்...!!

காதல் கணக்குகள்

லாபக் கணக்குகளை
போட்டு முடிப்பதற்குள் 
நஷ்டம் வந்து விடுகிறது 
காதலில்... 
நேற்றைய அவளின் சிரிப்பை 
முழுவதுமாய் ரசித்து முடிக்கும் முன் 
இன்று முறைத்து விட்டு 
போகிறாள்..
சந்தோஷ கனவுகளை 
கவிதை ஆக்குவதற்குள்
சோகத்தை என் முன் 
கொட்டி விட்டு போய் விடுகிறாள் ...!!



கவிதையாகிய அவள் விழி..








கவிதை கண்டேன் உன் கருவிழியில்,
இனி கலங்காதே..நீ கலங்கினால்..
கவிதையுடன் என் இதயமும் நனைந்துவிடும்..!!

Thursday, June 17, 2010

வாழ்ந்து பார்

உனக்கு வாழ்வதற்கு தைரியம் இல்லையா..
தற்கொலை செய்துகொள்..
தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு தைரியம் வந்துவிட்டதா
வாழ்க்கையை வாழ்ந்து பார் -
கவிஞர் கண்ணதாசன்

இதய சுவர்கள்

என் இதய சுவர்களில்
இன்றும் முட்டி மோதிக்கொண்டிருக்கிறது
பிரியும் முன் நீ பேசிச் சென்ற வார்த்தைகள்..!!

போதும் நிறுத்து

கண்ணே போதும் நிறுத்திவிடு !
இல்லையேல்
காதலெனும் வெள்ளத்தில் நீச்சல் அடித்துக்கொண்டிருக்கும் நான்
மூழ்கிவிடுவேன் !!

இதயம்

அவளை மட்டுமே நினைத்து துடித்துக்கொண்டிருக்கும்
என் இதயத்திற்கு புரியவில்லை
அவளுக்கு இதயமே இல்லை என்று !!

சேலை

நீ
சேலை கட்டி வரும்போது தான்
எனக்கு பயமாய் இருக்கிறது ..!!
எங்கே சேலையும் என்போல் சரிந்து விடுமோ என்று !!

காத்திருக்கிறேன்

என் கவிதைகளை ரசித்துக்கொண்டிருக்கையில்
இது யாருக்காக என்று நீ கேட்கும்போதெல்லாம்
என் இதயம் துடிக்கிறது !
உனக்காக தான் என்று சொல்லடா என..!!
சொல்லிவிடுவேன்..
ஆனால்
எனக்காகத்தானே
என நீ கேட்கும்வரை காத்திருக்கச்சொல்கிறது
என் மனது..!!!

இதய கடிகாரம்

நீ என்ன
என் இதய கடிகாரத்தின் முட்களா ?
நீ இன்றி இயங்க மறுக்கிறது !
என் இதயம்..!!

ஊஞ்சல்

என் இதயத்தில்
ஊஞ்சல் கட்டி
நிதமும் ஊஞ்சலாடுபவளே…
நிறுத்தி விடாதே
உன் ஆட்டத்தை…
நின்று விடும்
என் ஓட்டம்…!!

காதல் விதி

முதல் காதலை அடைய
முயற்சிக்கும்போது
அதற்குறிய தகுதி
நம்மிடம் இருப்பதில்லை..
எல்லா தகுதிகலையும்
அடைந்துவிட்டபிறகு
முதல் காதல்
கிடைப்பதில்லை...!

யோசி

யோசித்த பின் நேசி ஆனால்...
நேசித்த பின் யோசிக்காதே 
அது
நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும் !!

பேனா கூட பேசுகிறது

அனுப்பியவர்: விஸ்வா
நான் உன்னை நினைத்து 
எழுதும் போது
என் 
பேனா கூட கவிதை பேசுகிறது,
அந்த கவிதைக்கு சொந்தக்காரி
நீ என்பதால்!!

காதல் வலி

பூட்டியிருந்த என் பிஞ்சு இதயத்தை 
திறந்து வைத்தது உன் 
கடைக் கண் பார்வை தான்.
இறுகியிருந்த என் இதயம் - முதன்முதலாய் 
தோற்றது உன்னிடம் தான்
என் இதயத்தில் இடம் பிடித்த நீ
சில வேளைகளில் என்னை 
சிரிக்க வைத்தாய்
பல வேளைகளில் என்னை 
அழ வைத்தாய் 
ஆனால் அந்த வலி எனக்கு 
அப்போது தெரியவில்லை.
இன்றோ, வலிக்கிறது என்று 
சொல்லக் கூட வழியில்லை 
இருந்தும் - நானும் வாழ்கிறேன் 
வெறும் நடைப் பிணமாய் 
எல்லோரிடமும் தோற்று, 
எல்லாவற்றிலும் தோற்று, 
என் ஆசைகளை நிராசையாக்கி 
என்னில் நானே செத்துக் கொண்டு இருக்கிரேன் !!!

Wednesday, June 16, 2010

பிஞ்சு காலால்



அனுப்பியவர் : அன்பு மலர்
நெஞ்சில் உதைத்த
போதும் அன்பு
மழை பொழிந்தாயே!
சிறுவர் பட்டாளத்தில்
ஓடி விழுந்தது போதும்
பாட்டுப் போட்டியில்
பரிசிழந்து நின்றபோதும்
பரிவுடன்
ஊட்டம் கொடுத்தாயே!
பருவ குழந்தையாய்
பருந்துகளின் கண்களில்
மாட்டிய போதும்
அடுத்த வீட்டுப்
பெண் எடுத்துச்
சொன்ன போதும்
என்னை நம்பி இருந்தாயே!
பருந்தே உலகம்
பறப்பதே இன்பம்
என கனாகண்டு
ஓடி வந்தபின்பு
உடம்பு இளைக்கிறதம்மா!
பறப்பது வலிக்கிறதம்மா!
பருந்தும் கடிக்கிறதம்மா!
அம்மா! அம்மா!
உன் மடியில் எனக்கு இடந்தந்து
என்னை அரவணைப்பாயா
உயிரோடு அல்லது
பிணமாகவாது...

Friday, June 11, 2010

சுவடு

உன்
கால் சுவட்டில்
கால் வைத்து
நடந்து வந்தேன்!
திரும்பி பார்த்தால்
கால் சுவடு
இருந்த இடமெல்லாம்
காதல் சுவடு!

கண்ணீர்..... கண்ணீர்.........

கண்ணீரை நான் ரசித்தேன்
எனக்காக அவள் அழும் போது
அதே கண்ணீரை நன் வெறுக்கிறேன்
என்னைபிரிந்து அழவைக்கும் போது..........

சந்தோசம்

அனுப்பியவர்:டெல்லில் இருந்து விஸ்வா  
உன்னை
பார்க்கும்போது வருகிற சந்தோசத்தை விட,
உனக்காக காத்து இருக்கும்போது! 
கிடைக்கிற சுகம், 
மிகவும் 
இனிமையாய் இருக்கிறது !!

காதல்

அனுப்பியவர்:டெல்லில் இருந்து விஸ்வா   
"நீ அன்று சொன்னாய்,
 பிறப்பது வெற்றி பெறுவதற்கு என்று,
 நான் இன்று உணருகிறேன் 
அந்த வெற்றி என்னவென்று, 
உன் மனதில் என் காதல்.

இப்படியும் சமாளிப்போம்.........



நான்
உன்னைக் காதலிக்கிறேன்
என்பதற்காக
நீயும் என்னைக்
காதலித்துவிடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க முடியாது !!

உதவி செய்

என் வாழ்க்கை புத்தகத்தில்
உன் பெயர் எழுதிய தாள்களை
கிழித்து ஏறிய முயல்கிறேன் 
இதற்காவது உதவி செய். 

இனிமையான காதல் கவிதை

பெண்ணே !
நீ மவுன விரதம் இருந்தால், முதலில்
உன் கண்களை மூடிக்கொள்.
உன் உதடுகளை விட,
உன் கண்கள் தான் அதிகம் பேசுகின்றன !!

காதல் சிகிச்சை

இதய துடிப்பு ஏறும்.....
வார்த்தை எல்லாம் குளறும்....
காதல் வந்தா நீ நேயாளி 
கல்யாணம் தாண்டா அதுக்கு சரியான வழி...........

என்ன மொழி ?

தமிழ் முதல் சீனம் வரை
பல மொழிகள் புரிகிறது
உன் விழிகள்ப் பேசும்
வார்த்தை மட்டும் புரியவில்லை!
எந்த பல்கலை கலமும்
எந்த பேராசிரியரும்
விளக்க முடியாத
பாஷையடி
உன் விழிகள் பேசுவது!!

Wednesday, June 9, 2010

காதலின் பிரிவு

பயணம் முடிந்ததும்
நீ வீசிவிட்டுப்போன பயணச்சீட்டு
வீதியிய் புலம்பிக்கொண்டிருந்தது
பயணம் முடிந்துவிட்டதை நினைத்து
என்னை போல

என் காதல் அழுகிற குழந்தை மாதிரி



துடிப்பதைவிட
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு.
உன்னை ஏன்
இப்படி காதலித்துத்தொலைக்கிறேன்.
அடிக்கிற அம்மாவின்
கால்களையே கட்டிக்கொண்டு
அழுகிற குழந்தை மாதிரி..

ஏன் இந்த வெறுப்பு

வெறுக்க விரும்புகிறேன்
உன்னை நான்
விரும்பி வெறுக்கிறாய்
என்னை நீ….

கற்றுக்கொடு

எப்படி மறந்தாய்
என்னை
சொல் அன்பே
நானும்
உன்னை
மறக்க…

இது எப்படி முடிகிறது உன்னால் ?

உன்னால் மட்டுமே
முடியும்
இதயத்திற்கு
இதமான
அன்பு கொடுத்து
பிரிவு எனும்
இடியும் கொடுக்க…

உன் நினைவு

எப்படி முடியும்
உந்தன் நினைவுகள்
என் மனதில்
கடிகார முற்கள்
போல்இடைவிடாது
ஓடிக்கொண்டு
இருக்கும்போது.
எப்படி உன்னை மறக்கமுடியும்…….

படித்ததில் பிடித்தது…………….

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பு

பையா- சுத்துதே சுத்துதே பூமி

பையா- துளி துளி மழையாய்

Monday, June 7, 2010

நீயே என் காதல் கவிதை


எல்லா காதல்பாடல்களும்
உன்னைப்பற்றியே
எழுதப்பட்டிருப்பதாக
தோன்றுகிறது
எனக்கு..
எல்லாக் கவிதைகளுமே
உன்னைப்பற்றியவைதாம் எனினும்
ஒரு கவிதைகூட
உன்னைப் மாதிரி இல்லையே
உன்னைப்பற்றிக் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்!
நீயே கவிதையென்பதை உணராமல்!!

...............உயிர்..

ஊமை காதல்


அற்புதமான காதலை
மட்டுமல்ல,
அதை உன்னிடம்
சொல்ல முடியாத
அதி அற்புதமான
மௌனத்தையும்
நீதான் எனக்குத்
தந்தாய் !!

என் காதல் தவம்

முனிவர்கள்
கடவுளைப் பார்ப்பதற்காகத்
தவம் இருக்கிறார்கள்.
நானோ,
ஒரு தேவதையைப் பார்த்துவிட்டு
தவம் இருக்கிறேன்
முனிவருக்கு கடவுள் மேல் இருப்பது பக்தி எனக்கு அவள் மேல் இறுப்பது காதல் அவளுக்கு என்மேல் இறுப்பது வீண் கோபம்விட்டு விடு கோவத்தைஇல்லை விட்டு விடுவேன்
என் உயிரை !!

அவளின் பார்வை


தவிர்த்தலுக்கென்றே
ஒரு பார்வை
வைத்திருக்கிறாய்-நீ
தவிப்பதற்கென்றே
ஒரு இதயம்
வைத்திருக்கிறேன் நான்

ஓஹோ இதுதான் காதலோ


நேற்று வரை
அவளிடம் பேச
பயந்த எனக்கு,
இன்றெப்படி வந்தது
தைரியம்!
அவளுக்கு திருமண
வாழ்த்துச் சொல்ல...?
ஓஹோ இதுதான் காதலோ